இன்றைய அரசியல் சூழ்நிலையானது பல நெருக்கடிகளும் பல சிக்கல்களும்,பல கற்பனைகள் வியூகங்களின் மத்தியிலும், துயிலும் இல்ல நிகழ்வுகள் இடம்பெறுமா என்ற கேள்விக்கு மத்தியிலும் எமது நிர்வாகத்தினர் இந்த நிகழ்வினை நிச்சயமாக கடைப்பிடித்தே தீருவோம் என்ற அயராத உறுதியுடன் செயற்படுகின்றோம் என்று முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு தேராவில் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவீரர் துயிலம் இல்லத்தின் பணிக்குழு தலைவர் ஈசன் கருத்து தெரிவிக்கையில்,
உண்மையில் எங்கள் மாவீரச் செல்வங்களின் மகத்தான நினைவுநாள் நவம்பர் 27 இல் இடம்பெறவுள்ளது அந்த நாளை உணர்வெளிச்சியுடன் கடைப்பிடிப்பதற்கு எமது மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு ஒத்துளைப்புடனும் உணர்வு பூர்வமாகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இந்த துயிலும் இல்ல வளாகத்தில் பல பணிகள் செய்யவேண்டியுள்ளதால் இங்கிருக்கின்ற தாயக உறவுகள் மற்றும் பொது அமைப்புக்கள் வருகைதந்து மிகுதியாக இருக்கின்ற பணிகளையும் பூர்த்தி செய்து கார்த்திகை 27ல் மாவீரர் நாளினை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றேன்.
இன்றைய அரசியல் சூழ்நிலையானது பல நெருக்கடிகளும் பல சிக்கல்களும்,பல கற்பனைகள் வியூகங்களின் மத்தியிலும், துயிலும் இல்ல நிகழ்வுகள் இடம்பெறுமா என்ற கேள்விக்கு மத்தியிலும் எமது நிர்வாகத்தினர் இந்த நிகழ்வினை நிச்சயமாக கடைப்பிடித்தே தீருவோம் என்ற அயராத உறுதியுடன் செயற்படுகின்றோம் இது வீண்போகாது நிச்சயமாக மாவீரர்களின் நினைவுநாள் கார்த்திகை 27 நடைபெற்றே ஆகும் அதற்கான சகல ஒழுங்கு படுத்தல்களையும் செயற்பாட்டுக்குழு ஆகிய நாங்களும் இங்குள்ள தாயக உறவுகள் புலம்பெயர் உறவுகள் பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
வழமை போன்றே மாவீரச்செல்வங்களின் வழிபாட்டுத்தினமான கார்த்திகை 27 ஆம் நாள் நிச்சயமாக நடைபெறும் அனைத்து உறவுகளும் எமது தாயக விடுதலைப்போராட்டத்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த பெற்றோர்கள் உறவினர்கள்,தவறாது சமூகம்கொடுத்து உங்கள் பிள்ளைகளின் தீபங்களை ஏற்றி வணக்கம் செலுத்த வருமாறு அனைத்து உறவுகளையும் அன்பாக வேண்டி நிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்